புதன், 19 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----133

 

தன்னேரிலாத தமிழ்----133

செஞ் ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்

பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளி திரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்றளந் தறிந்தார் போல என்றும்

இனைத் தென்போரும் உளரே

   --உறையூர் முதுகண்ணன் சாத்தனார். புறநா. 30 : 1 – 6

               அறிவியல் புலவர் – “ செஞ்ஞாயிற்றினது வீதியும் ; அஞ்ஞாயிற்றின் இயக்கமும் ( சூரியனின்  வட .தென் செலவைக் குறிப்பதோடு ஏனைய கோள்களை ஈர்த்தலும் இயக்குதலும்) அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார் வட்டமும் ; காற்று இயங்கும் திக்கும்( வான் வெளியில்) ; ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்து அறிந்தவர்களைப்போல நாளும் இத்துணையளவை உடையனவென்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்…. பரிப்பென்றதுஇத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லுமென்னும் இயக்கத்தை.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக