செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----139

 

தன்னேரிலாத தமிழ்----139

புருவத்துக் கருவல் கந்தத்தால்

தாங்கி இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்

ஓங்கிய பலர் புகழ் குன்றினொடு ஒக்கும்

--கடுவன் இளவெயினனார். பரிபா. 4 :  22 – 24

                  பண்டை நாளிலே இந் நிலம் வெள்ளத்தில் மூழ்கியபொழுதுநீ பன்றியாகி வன்மையுடைய கழுத்தாலே தாங்கிஇவ்வுலகத்தை மேலே கொணர்ந்து திருத்திய செயல்நிலத்தின் நடுவே நின்று அதனைத் தாங்கி- உயர்ந்த  பலரானும் புகழப்படும் மேருவின் செயலை ஒக்கும்.

உலகத்தோற்றத்தின் முதல் நிலையாக இமயம் தோன்றியது ஈண்டுச் சுட்டப்படுதல் கொண்டு நிலத் தோற்றம் அறிவியல் ஆய்வு நோக்கில் அமைந்துள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக