சனி, 29 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----143

 

தன்னேரிலாத தமிழ்----143

ஆறறிவு

                           ஆறாவது அறிவாகிய மனத்தைப் பெற்ற மனிதன் அதன்வழி சிந்திக்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மனத்தின் தெளிவு நடத்தையின்வழி வெளிப்படுகிறது. தொல்காப்பியரின் உளவியல் ஆய்வு சிக்மண்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுக்கு முன்னோடியாக விளங்குகிறது.”ஆறறிவதுவே அவற்றொடு மனனே” – என்னும் கூற்று பிராய்டின் கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. அவற்றொடுஎன்னும் ஒரு சொல்லால் தொல்காப்பியர் உளவியல் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானி ஆகிறார்.  அதாவது விலங்குணர்ச்சியை உள்ளடக்கிய ஆறாவது அறிவைப் பெற்றது மனித இனம் என்பதுதானே பிராய்டின் கண்டுபிடிப்பு.

               கி.பி. 1856 இல் செக்கோஸ்லாவிய நாட்டில் பிறந்து ஆஸ்திரியாவில் வாழ்ந்த சிக்மண்ட் பிராய்டு பிறப்பால் யூதர். ஹிட்லரின் யூதர் இன ஒடுக்கத்தில் இவரும் தப்பவில்லைகொடுமைப்படுத்தப்பட்டார். இவருடைய ஆய்வுரைகள் கொளுத்தப்பட்டன. மனம் என்றால் என்ன ; மனத்திற்கும் நோய்க்கும் என்ன தொடர்பு..? என்பதை இவர் அறிவியல் நெறிப்படி விளக்கியதாலே மருத்துவ உலகில் மாபெரும் புரட்சிகள் நிகழ்ந்தன. உளவியல் அடிப்படையில் உலகில் எல்லாருமே பைத்தியம்தான் ; விழுக்காடுதான் வேறுபடுகிறது. பிராய்டு கூறுகிறார்மனத்துள் மறைக்கப்படும் எண்ணங்களாலேயே நோய்க்கு ஆளாகிறார்கள். மனநோய் உண்டாவது ஒருபுறம் மனத்தின் பலவீனத்தை அறிவிக்கிறது; இன்னொருபுறம் அத்தீய நினைவின் சக்தியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் உதவுகிறதுஎன்கிறார்.

                         உயிரினங்களுள் பறவைகள் குறித்து ஆய்வுசெய்த புலவர்கள் பல அரிய கருத்துக்களைக் கூறியுள்ளனர். பறத்தலினால் பறவை என்று பெயர் பெற்றது. புள் என்பது பறவையினத்திற்கான பொதுப்பெயர். காண்க கிட்டிப்புள்(ஆங்கிலேயர் கைப்பற்றிக்கொண்ட தமிழனின்சிறுவர் விளையாட்டு -  கிரிக்கெட்) எழுந்து பறப்பதால் அச்சிறு கட்டைக்குப் புள் என்று பெயர்.(Bird – a feathered animal with two wings and two legs)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக