ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----137

 

தன்னேரிலாத தமிழ்----137

தீவளி விசும்பு நிலன் நீரைந்து

ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்

திதியின் சிறாரும் விதியின் மக்களும்

மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்

தாமா இருவரும் தருமனும் மடங்கலும்       

மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்

மாயோய் நின்வயிற் பரந்தவை உரைத்தேம்

---கடுவன் இளவெயினனார். பரிபா. 3 : 4 – 10

                         நெருப்பும் காற்றும் வானமும் நிலமும் நீருமாகிய ஐம்பெரும் பூதங்களும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும்  - கோள்களில் நீங்கிய செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்னும் ஐவரும்அசுரர்களும் - விதியின் மக்களாகிய ஆதித்தர் பன்னிருவரும்பதினோர் உருத்திரர்களும்அச்சுவனி தேவர் இருவரும்இயமனும் அவன் ஏவலனாகிய கூற்றுவனும்முத்திரத்து இருபத்தோர் உலகங்களும்அவ்வுலகினுள் வாழும் உயிர்க் கூட்டங்களும் ஆகி விரிந்தவனே ! 

 

விளக்கம்:

                           அவ்விறைவனிடமிருந்து தோன்றிய உலகமாவது -  இறைவன் வடிவங்களாகத் திகழும் எண் வகை வடிவங்களாவன - வானம் காற்று தீ நீர் நிலம் என்னும் பூதங்கள் ஐந்தும் ;  ஞாயிறு திங்கள் வேள்விமுதல்வன் ( இயமானன்) ஆகிய மூன்றும்  இவ்வெட்டினையும்அட்டமூர்த்தங்கள்என்ப. கோள்கள் ஒன்பதனுள் ஞாயிறும் திங்களும் எண்வகை வடிவங்களுள் அடங்குதலானும்இராகு கேதுக்கள் காணப்படாதன ஆகலானும் எஞ்சியவற்றைப் பெயர் கூறாது ஐவரும் எனத் தொகையாகக் கூறினார். ஐவர் என்றது செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்னும் கோள்கள் ஐந்தினையும் என்க.

இதன்கண் உள்ள புராணக் கதைகளை மீட்டுருவாக்கி  அறிவியல் உண்மைகளை  அறியுவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக