வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 155. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 155. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

அறிவியல் புரட்சி : வீழ்ச்சி.

மதப் பின்னணியில் ஆட்சி செலுத்திய ஆட்சியாளர்கள் 16 ஆம் நூற்றாண்டில் எல்லா நாடுகளிலும் இருந்தனர்.  கோப்பர் நிக்கசு நூலைப்படித்த இளைஞர்கள் புதிய உலகைக் காணத்துடித்தனர். ; பழமையைப் புறக்கணிக்க எழுந்தனர்.  அவ்வாறு எழுச்சியுற்ற இளமை உள்ளங்களைத் த்ட்டி எழுப்பினார் ஜியார்டனோ புரூனோஎன்ற இத்தாலிய கிறித்துவத் துறவி.

 

புரூனோவின் சொற்பொழிவுகளை உரோமாபுரியும்  பிரான்சும் இங்கிலாந்தும் செர்மனியும்  கேட்டன. புரூனோ கோப்பர் நிக்கசு  கூறிய கருத்துகளை மெய்யென்றார். கிரேக்க விஞ்ஞானிகளின் கூற்றுகளை சான்றுகள் காட்டி நிரூபித்தார்.  ஜெனிவா நகரில் இவரது சொற்பொழிவைக் கேட்ட மதவாதிகள் இவரை உடனே நாடு கடத்தினர்.

கோப்பர் நிக்கசு எழுதிய நூலின் பெயர் புரட்சிகள் என்பதாகும். புரூனோவின் அறிவுப் புரட்சியால் மேலை நாடுகளில்  புதிய எழுச்சியும் புதிய கருத்துகளும் வேரூன்றத் துவங்கின.

புரூனோ சென்ற நாடுகளெல்லாம் அவரது சொற்பொழிவுக்குத்  தடை விதிக்கலாயின. தனது தாயகமாம் இத்தாலிக்கு அவர் திரும்பியபோது ஜெனீவா அரசு அவரைக் கைது செய்தது. விசாரணை என்ற பெயரில் அவரை எட்டு மாதங்கள் இருட்சிறையில் விலங்கு பூட்டிக் கொடுமை செய்தது.  இத்தாலிய அரசின் வேண்டுகோளின்படி இத்தாலிய சிறைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தது.

 

இத்தாலிய நீதிமன்றம் புரூனோவின் மீது என்ணற்றக் குற்றச்சாட்டுகளைச் சாற்றியது.  மதப் பகைவன் எனப் புரூனோவை அதட்டினர், உருட்டினர், அடித்தனர் எல்லாவிதக் கொடுமைகளும் அவருக்கு நேர்ந்தன.

அன்றைய உரோமை நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 17 – 2- 1600 இல். உரோமை நகரின் பொதுச் சந்தையில் மரம் ஒன்றிலே புரூனோவைப் பிணைத்துக் கட்டி, அவரைச் சுற்றி விறகுகள் அடுக்கப்பட்டுத் தீயிட்டனர்.

…………………………..தொடரும் …………………….

 

வியாழன், 20 பிப்ரவரி, 2025

 

சான்றோர் வாய் (மைமொழி : 154. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

கிப்போகிரடீசு: கி. மு. 460

கிரேக்க நாட்டில் மைலீட்டசு தீவிற்குப் பக்கத்துத் தீவாகியகாஸ்  தீவில் முதல்மருத்துவ  நிபுணர் கிப்போகிரட்டீசு பிறந்தார்.  இவரே  இன்றைய மேலை நாட்டு  மருத்துவர்களுக்கெல்லாம் தந்தையாவார்.

 நோய்கள் ஏற்படுவது பேயினால் அல்லது நட்சத்திரத்தால் அல்லது சகுனத்தால் என மக்கள் கொண்டிருந்த மூடநம்பிக்கையைத் தகர்த்தவர். பிணிக்கான காரணத்தைக் காண பிணியாளனை முறைப்படி  சோதிக்க வேண்டும் என்று  கூறிய முதல்வரும் இவரே.

ஆனக்சாகரசு: அறிவியல் வீழ்ச்சி:

இவர் ஏதன்சு நகரில் வாழ்ந்தவர்.  சந்திரனை சிறியதொரு பூமி எனக் கண்டு கூறியவர். சந்திரனில் பள்ளத்தாக்குகளும் மலைகளும் உள்ளன என்று கூறினார்.  இவர் கூற்றுக்குமுன் சந்திரனைத் தெய்வமென மக்கள் நம்பிப் பூசித்தும் வந்தனர்.

 சந்திரனைக்கண்ட ஆனக்சாசுரசு சூரியனையும் கண்டார் ; பிற கோள்களையும்  கண்டார். விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள் எல்லாம் தனித்தனி உலகங்களே என்றும் கூறினார்.

இவ்வாறு ஆராய்ந்து தனது கருத்துகளை நூலாக வெளியிட்டுக் கிரேக்க மக்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆனக்சாகரசு கருத்துக்களைக் கொண்டாட வேண்டிய மக்கள் கொதித்து எழுந்தனர். 

ஏனெனில் காலங்காலமாக  வழங்கிவந்த  தெய்வக் கருத்துகளை எதிர்த்த மக்கள்  ஆனக்சாகரசை  நீதிமன்றத்திற்கு இழுத்தனர். நீதிமன்றம் ஆனக்சாகரசை  நாடுகடத்த ஆணையிட்டது.

 

ஹைப்பேசியா: அறிவியல் வீழ்ச்சி.

ஜூலியஸ் சீசர் கி.மு. 102 காலத்தும் , அதற்குப் பின்பு வந்த உரோமாபுரியினர் மருத்துவத்திற்கோ, விஞ்ஞானத்திற்கோ  உரிய இடம் அளிக்கவில்லை. ஆராய்ச்சிக்கூடங்கள் கவனிப்பாரற்று மறையத் துவங்கின,.

 விஞ்ஞானம் இருந்த இடத்தில் ஆன்மஞானத்தைப்பற்றிப் பேசினர். இறந்தபின் தங்களுக்கு இடம் தேடி, அதைப்பெற அலைந்தனர். வானநூலார் யாரேனும் இருப்பின் அவர்கள் பரிகாசத்திற்கும் கேலிக்கும் ஆளக்கப்பட்டார்கள். ஆராய்ச்சியாளர்களை நாடு கட்த்தவும் கொலை செய்யவும் துணிந்தனர்.

ஹைப்பேசியா எனும் பெண் விஞ்ஞானியை மக்கள் கூட்டமொன்று தாக்கி அவளுடைய சதையைப் பிய்த்து நாய்களுக்கு எறிந்தது.

 அரசு ஆணைப்படி நூலகங்கள் மூடப்பட்டன.  அலெக்சாண்ட்ரியா பல்கலைக் கழகம் மூடப்பட்டது. விஞ்ஞானிகளும் விவேகிளும் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள  உரோமைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

புதன், 19 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 153. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 153. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

சர் ஐசக் நியூட்டன்: 1643 – 1727.

நியூட்டன் இங்கிலாந்து நாட்டவர், இவர் கூறிய  தத்துவச் சிந்தனைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. கோப்பர் நிக்கசு,கெப்லர், கலிலியோ முதலியோருக்கு இருந்த மத இடையூறுகள் இவருக்கு இல்லை. இவருடைய அறிவியல் எழுச்சி, சிந்தனையாளர்களை அனுபவ உலகை நோக்கித் தள்ளின.  எங்கும் உள்ள ஈர்ப்புவிசை இயக்கம் பற்றித் தந்த விளக்கம் புதிய ஆய்வுகள் தோன்றவும் கண்டுபிடிப்புகள்  பெருகவும் உதவின. இதனால் மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது ; நாகரிக வளர்ச்சி மேம்பட்டது.

நியூட்டன் முப்பட்டைக் கண்ணாடியை ஆய்ந்து ஒளியின் நுட்பத்தை விளக்கினார். வானவில் என்பது சூரியனின் ஒளிக்கற்றை என்பதையும் நமக்குக் கிடைக்கும் வெண்மையான ஒளி அக்கலவைகளின் தொகுபுத்தான் என்று  மெய்ப்பித்தார்.

 நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபொழுது ஆப்பிள் பழம் ஒன்று  பூமியில் விழுவதைக் கண்னுற்றார். “அப்பழம் பூமியில் ஏன் விழவேண்டும்”? என்ற கேள்வியைத்  தன் மனதுள்கேட்டுக்கொண்டார். அக்கேள்வியின் விளைவு அவர் சிந்தனையைத் தூண்டி புவி ஈர்ப்பு விதியைக் கண்டுபிடித்தது.  பூமி மட்டுமின்றி வானத்தில் காணப்படும் எல்லாக் கோள்களும் அவ்வகை ஈர்ப்புச் சக்தியைத் தம்மிடத்தே கொண்டுள்ளன என்பதால் நியூட்டனின் விதி எல்லாக் கோள்களுக்கும் பொதுவானதாக உள்ளது. இயற்கை தனக்குத்தானே அமைத்துக்கொண்டுள்ள விதியைக் கண்டுபிடித்து நியூட்டன் விளக்கிய பின்பு ; நுண்கணித விதி ஒன்றையும் கண்டுபிடித்து, அக்கணித விதியின்படி கோள்களின் இருப்பிடம், சுழற்சி, வேகம், காலம் யாவையும் கண்டுபிடிக்கும் வழியையும் உலகுக்கு விளக்கினார்.

 இவர் விளக்கிய நுண்கானித விதிப்படி விஞ்ஞானிகள் கோள்களை ஆராய்ந்து ஆங்குள்ள  கண்டு தெளியாத கோள்களையும் காணத்துவங்கினர். வானியல் வல்லுனர்களுக்கு நியூட்டனின் வழி பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவியாயிருந்தது. ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86, 000. மைல்கள் எனக் கணக்கிடப்பட்டது. இவ்வாறு ஒளியின் வேகம் கண்ட பின்பு எல்லாக்கோள்களிலும் உள்ள  இரகசியக் கதவுகள் எல்லாம் திறந்துகொண்டன..

 

 ………………………..தொடரும் ……………………

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 152. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 152. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

யோகான்னசு கெப்லர் : 1571 - 1630

யோகான்னசு கெப்லர் (Johannes Kepler, ஜோகான்னஸ் கெப்லர்டிசம்பர் 271571 – நவம்பர் 151630), ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானிய)க் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova (ஆசுட்ரோனோமியா நோவா) மற்றும் Harmonice Mundi (ஆர்மோனிசெ முண்டி) ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்.

கெப்லர், கிராசு பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது உருடோல்பு (Rudolf II) பேரரசரின் அரசவைக் கணிதவியலாளராகவும், செனெரல் வாலென்சுட்டைனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ பிராகி (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் கலிலியோ கலிலியின் சமகாலத்தவராவார்.

இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வானியில் இயற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். கார்ல் சேகன் (Carl Sagan) இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார். (விக்கிபீடியா)

”1620 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் ஏழாம் நாளில் கெப்லரின் தாயை, சங்கிலியாற் பிணைத்து இருட்டுச் சிறையிலே தள்ளினார்கள்.  அந்த தாயைச் சித்திரவதை செய்தார்கள்.  சூனியக்காரி’ – என்ற குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி  வற்புறுத்தினார்கள். காட்டெரினா எனும் பெயர்கொண்ட  அந்த தாயை பதினான்கு மாதங்கள் சித்திரவதை செய்து சூனியக்காரி என ஒப்புக்கொள்ள அன்னை மறுத்துவிட்டாள்,

அப்பொழுது கெப்லர் பிராக் நகரில் அரசவையில் இருந்தார். தாய்க்கு ஏற்பட்ட  அவல நிலை அறிந்து ஓடோடி வந்தார். தனது செல்வாக்கால்  தாயை விடுதலை செய்தார்.

கெப்லர் தான் எழுதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கதை உருவில்கனவுஎனப் பெயரிட்டு வெளியிட்டார். இக்கனவுக் கதையில்  தனது தாயார் காட்டெரினாவை ஓர் தேவதையாக உருவகப்படுத்தி, இளைஞர்களுக்கு அத்தேவதை கதை கூறுவதைப்போல் ஆய்வுகளைப் படைத்தார். எளிய நடையில் எழுதப்பட்ட அந் நூலைக் கண்ணுற்ற பொகீமியா மக்கள்  அன்னை காட்டெரினாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத்தொடங்கினர். இதனால் தான் காட்டெரினாவைச் சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி சித்திரவதை செய்தனர்.

 கெப்லர் வெளியிட்டகோள்களின் விதி ஆய்வை இன்றைய விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். அவர் தனது முதல் வெளியீட்டில்கோள்கள் யாவும் சூரியனைச் சுற்றி ஓர் நீள்வட்டப் பாதையில் செல்கின்றன என்றார்.

கெப்லர் தனது அடுத்த வெளியீட்டில்கோள் ஒன்று  சூரியனை நெருங்கும்போது அக்கோளின் வேகம் அதிகமாகும் என்றும் சூரியனை விடுத்துத்  தூரமாக விலகிச் செல்லும்போது அக்கோளின் வேகம் குறைவுபடும் என்றும் கூறினார். இவர்தம் அறிவாற்றல் கண்டு உலகம் வியந்தது.

………………………..தொடரும் ……………………

திங்கள், 17 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 151. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 151. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

அறிவியல் புரட்சி :

கோப்பர்  நிகசு, கலிலியோ, கெப்லர், நியூட்டன்.

 

கோப்பர் நிகசு :1474 – 1543.

தாலமி வகுத்த புவிமைய பிரபஞ்ச கோட்பாடு  - பூமியை மையமாகக் கொண்டு பிரபஞ்சத்தின் பிற கோள்கள்  இயங்குகின்றன என்றார்.  கோப்பர் நிகசு தாலமியின் கருத்தை மறுத்தர்.

 

 

போலந்து நாட்டுக்காரர். ரோமில் கணித பேராசிரியராகப் பணியாற்றினார். தாய்நாட்டில் வானியல் ஆய்வுக்கூடம் அமைத்தார். சூரியனை மையமாகக் கொண்டு  இப்பிரபஞ்சம் இயங்குகிறது என்றார். பிற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன ; பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்றார். இவர் கண்டுபிடித்த  ஆய்வு முடிவுகள் மத கருத்திற்கு  எதிரானதாக இருந்தது, மதத்தலைவர்களுக்கும் அவர்கள் தரும் தண்டனைகளுக்கும் அஞ்சி, ஆய்வு நூலை வெளியிடாது வைத்திருந்தார். இவர் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்கித் தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியபோது ஆய்வு நூலை வெளியிட  இசைவளித்தார். அந்நூல் அச்சாகி  வெளிவர, அந்நூலினைக் கையில் பற்றியவுடன் பெரு மகிழ்ச்சிகொண்ட  கோப்பர் நிகசு அப்பொழுதே மரணமானார்.

கலிலியோ : 1564 – 1643.

 கலிலியோ தன் இளமைப் பருவத்திலேயே நீரின் கன அழுத்தக் கருவியைச் செய்துகாட்டி  நவீன ஆர்க்கிமிடீசுஎன்ற பெயரைப் பெற்றார். மருத்துவத்துறைக்குப் பயன்படும் நாடித்துடிப்புக் கருவியைக் கண்டுபிடித்தார்.  அரிசுடாட்டில் என்ற கிரேக்க தத்துவ மேதையின் முடிவுகள் பலவற்றைத் தவறு என்று மெய்ப்பித்துக்காட்டினார்.

இவ்வகைச் செயலை வெற்றிகரமாகச் செய்த கலிலியோவை, பைசா நகரத்து மக்கள் நாடு கடத்தித்  தங்கள் நல்லறிவைப்பறைசாற்றிக்கொண்டனர். கலிலியோ பாதுவா நகரம் சேர்ந்தார். 1602 இல் காற்று வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.

 1609 ஆம் ஆண்டில், கலிலியோ, மறைந்த விஞ்ஞானி கோப்பர்நிகசின் கருத்துகளை தீவிரமாக ஆராய்ந்தார். ஆய்வின் முடிவில் உலகின் முதல்  தொலைநோக்கியை உருவாக்கினார்.

இதுவரை மனிதன் தன் ஊகத்தால் கூறியவற்றையெல்லாம் கலிலியோ தன் கண்களால் நேரிடையாகப் பார்த்தார். சந்திரனைப்பார்த்தார்;  சந்திரனில் உள்ள மலைகளையும் ஆழமான பள்ளங்களையும் பார்வையிட்டார். வியாழனின் துணைக்கோள்களைப் பார்த்தார். சனிக் கோள்களைப் பார்த்தார். வெள்ளிக்கோள் சூரியனைச் சுற்றி வரும்போது அவ்வெள்ளியில் தோன்றும் மாறுபாடுகளைக் கண்டார். சூரியனில் ஆணப்படும் புள்ளிகளை ஆராய்ந்தார்.  தனது ஆய்வு முடிவுகளை  இருமுக்கியமான உலக அமைப்புக் கொள்கைகள் பற்றிய உரையாடல் ‘” எனப் பெயரிட்டு வெளியிட்டார்.

 இவருடைய ஆய்வால் உலக மக்களும் அறிவை நோக்கி வலம்வரத் துவங்கினர்.

அறியாமையை முதலீடாகக் கொண்ட மதவாதிகள் கலிலியோவின் கைகளில் விலங்கினை மாட்டி 70 வயது நெருங்கிய அவரை உரோம நகரின் தெருக்களிலே  வலம் வரச் செய்தனர். அவரை நீதி மன்றத்தில் நிறுத்தினர்.

 மாபெரும் மேதை கலிலியோ, ஆட்சியாளர்கள் மீது கொண்ட அச்சத்தால் ; மதவாதிகளின் கூர்வாளுக்கு  அஞ்சி அப்போதைக்கு தன் கருத்தை மாற்றிக்கொண்டு மன்னிப்பு வேண்டினார் என்று அவர்தம் வரலாறு கூறுகிறது.

சனி, 15 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 150. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . விஞ்ஞானத்தின் விளைவுகள் :

 

சான்றோர் வாய் (மைமொழி : 150. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி . விஞ்ஞானத்தின் விளைவுகள் :

 

அறிவியல் துறைகள் பலவும் தனித்து இயங்குவதால் மனித சமுதாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதனுக்குத் தேவையான காற்றும் நீரும் மாசுண்டதால்  உயிரினங்கள் அனைத்தும் அழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. பசுமைப் புரட்சிக்குப் பயன்பட்ட பூச்சிக்கொல்லிகள் இன்று தடை செய்யப்பட்டுள்ளன.

 

 “ மேற்கு நாடுகளில் நாம் சந்திக்கும் பெரிய பிரச்சனை விஞ்ஞானத்தைப்பற்றி ஏற்பட்டிருக்கும் பொதுவான ஏமாற்றமே. அங்கே விஞ்ஞான எதிர்ப்பு இயக்கங்கூட ஏற்பட்டு வருகிறது.” என்று கூறுகின்றார் யுராப்.

 

  ” விஞ்ஞான வளர்ச்சி உயிர் மண்டலத்தின் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டுதான்  விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டும். என்பது இப்பொழுது தெலிவாகின்றது. மனிதனையும் இயற்கையையும் ஒன்று சேர்ப்பதில் புதிய வாய்ப்புகளையும் வடிவங்களையும் விஞ்ஞானம் கண்டுபிடிக்க வேண்டும்.” என்கிறார் இ. நோவிக்.

 

விஞ்ஞானம் ஏற்படுத்தும் புறக்கேடுகளும்  பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் அகக் கேடுகளும் இன்று விஞ்ஞானிகள் முன்னுள்ள சவால்களாகும்.

 

” இயற்கைக்கு எதிராக மனிதர்கள் அடைந்திருக்கும் வெற்றிகளுக்கு நாம் நம்மை மிகவும் அதிகம் பாராட்டிக் கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்கி வருகிறது. முதல் கட்டத்தில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த  விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே. ஆனால், இரண்டாவது, மூன்றாவது கட்டங்களில் முற்றிலும் மாறுபட்ட., நாம்  எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகின்றன.. முதல் கட்டத்தில் ஏற்பட்ட வெற்றியை அவை பெரும்பாலும் ரத்து செய்துவிடுகின்றன.” என்ற எங்கெல்சின் கூற்று சிந்தித்தற்குரியது.

 

“அறிவு , மரணம் இவை இரண்டனுள் ஒன்றை இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாக நாம் உறுதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் மனிதகுலம் மரணத்தையே தேர்ந்தெடுக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது, எனது எண்ணம் தவறாயிருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை .” –ரஸல்.

 

“ விஞ்ஞானம் என்னும் அழியா சோதி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.” என்ற காரல் மார்க்சின் கூற்று விஞ்ஞானப் பயன்பாட்டின் எதிர்விளைவுகளைச் சுட்டிக்காட்டுகிறது.

 …………………..தொடரும்……………….

 

 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 149. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி .கலையும் அறிவியலும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 149. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .கலையும் அறிவியலும்.

கலையும் அறிவியலும் :

 விஞ்ஞானிகளின் கலை ஞானம் அளவிடற்கரியதாகும்.

 

கோபர் நிகஸ் – 1473 – 1543. போலந்து நாட்டைச் சேர்ந்த வானியல் அறிஞர். இவர் சிறந்த கவிஞர், ஓவியர், இவர் எழுதிய அறிவியல் நூலின் பெயர் – ‘புரட்சிகள்’ என்பதாகும்.

 கெப்ளர் – 1571 – 1630.

 இவர் செர்மானிய விஞ்ஞானி. கோள்களின் இயக்கம் குறித்து ஆராய்ந்து எழுதிய நூலின் பெயர் “ கனவு” என்பதாகும்.  தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை ஒரு கதையாக எழுதியிருந்தார்.

 

கலிலியோ – 1564 – 1642.

 இவர் தமது ஆய்வுரைகளை உரையாடலாக அமைத்திருந்தார்.  “ இரு முக்கியமான அமைப்புக் கொள்கைகள் பற்றிய  உரையாடல் ‘ என்பது அந்நூலின் பெயர்.

 

 19833 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகர் தன்னுடைய ஆய்வுக்கட்டுரைக்கு “உண்மையும் அழகும் “ என்று பெயரிட்டிருந்தார்.

மேற்சுட்டியுள்ள சான்றுகள் கலையார்வம் விஞ்ஞான மனத்தை வளப்படுத்தியது என்ற உண்மையும் கலையாக வளரும் விஞ்ஞானம் முறையான  அறிவு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது இனிதே விளங்கும். அறிவார்ந்த கலைகளின் அடிப்படையிலேயே  கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. தஞ்சை பெரிய கோவிலும் எகிப்து பிரமிடுகளும் கலை சார்ந்த விஞ்ஞானப் படைப்புகளே. கடந்த நூற்றாண்டுகளில் கலைகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் நெருங்கிய உறவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

விஞ்ஞானத்தின் விளைவுகள் :

 விஞ்ஞானத்தின் விளைவுகளை மதிப்பிட்டால்தான் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்க முடியம். கடந்த 300 ஆண்டுகளாக விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஆகிய ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் ஆகிய இவ்வுலகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்துள்ளன.

 இயற்கையை வெல்ல வேண்டும் என்ற விஞ்ஞான வேகம் ஒரு நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது என்பதை யாவரும் அறிவர்.

…………………..தொடரும்……………….