செவ்வாய், 6 ஜனவரி, 2026

தமிழமுது –177 – தொல்தமிழர் இசை மரபு: ......தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.

 தமிழமுது –177 – தொல்தமிழர் இசை மரபு: 

                       சான்றோர் ஆய்வுரை – 37 

 தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர். 

இராகம்,சுரம்சுருதிஆய்வுரை. 

  செம்பாலைப்பண்: குரலே குரலாக அதாவது, ச -வே, ச - வாக ஆரம்பித்துப் பாடப்படுவது ; இதுவே தீரசங்கராபரணம். 

   படுமைலைப்பாலைப்பண்  : துத்தம் குரலாக அதாவது ரிஷபம் சட்சமமாகக் கிரககமாற்றிப் பாடுவது ; இதுவே கரகரப்பிரியா. 

ெவ்வழிப்பாலைப்பண்: கைக்கிளை குரலாக அதாவது காந்தாரம் சட்சமமாக வைத்துக் கிரகசுர மாற்றிச் சொல்வது ; இதனைத் தோடி என்பர். 

அரும்பாலைப்பண் உழை குரலாக அதாவது மத்திமம் சட்சமமாக வைத்துப் பாடுவது ; இது கல்யாணி என்று பெயர் பெறும். 

 கோடிப்பாலைப்பண : இளி குரலாக அதாவது பஞ்சமம் சட்சமமாக வைத்துப் பாடுவது ; இதற்கு அரிகாம்போதி என்று பெயர். 

ிளரிப்பாலைப்பண : விளரி குரலாக அதாவது தைவதம் சட்சமமாகப் பாடப்படுவது ; இதுவே பைரவியாம். 

ேற்செமபாலைப்பண் தாரம் குரலாக அதாவது நிஷாதம் சட்சமமாக ஆரம்பித்துப்பாடுவது ; இதனை ுத்ததோடி என்பர் இவை ஏழும் ஆயப்பாலையில் வரும் ஏழு பெரும்பாலைகளாம். 

வலிது : மேல் சுரமுடையது ; செம்பாலைக்குப் படுமலைப்பாலை 

வலிதுஅதாவது ச - வில் தொடங்கும் செம்பாலைக்கு ரி-யில் தொடங்கும் படுமலைப்பாலை மேல் சுரத்தைக் கொண்டு ஆரம்பிப்பதால் வலிதென்றார்இதைப்போலவே மற்றைப்பாலைகளும் ஒன்று ஒன்று மற்றொன்றினும் வலிதாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக