புதன், 6 மே, 2015

வலமாக எழுதல்

வலமாகச் சூழ்ந்து எழுவது என்றால் என்ன?

பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை
 காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், முல்லைப். 4 - 6
அலையோசை முழங்கும்  குளிர்ந்த கடல் நீரைக் குடித்து எழுந்த மேகம்,அகன்ற உலகத்தை வளைத்து, வலமாக உயர்ந்து எழுந்து  , மலைகளில் தங்கி மழையைப் பொழிந்த புல்லிய மாலைக் காலம்.
திருமுருகாற்றுப்படை
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு..
.
               -நக்கீரர், திருமுரு.1, 2
உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் மகிழும்படி, மேருவை வலமாக எழுந்து, பற்பல சமயத்தவரும் புகழ்கின்ற ஞாயிறு கீழ்க் கடலிடத்தே எழக் கண்டாற்போன்று....


.

 வலஞ்சுரி
சிலம்பு அணிகொண்ட வலம்சுரி மராஅத்து
வேனில் அம்சினை கமழும்
                             சேரமான் எந்தை, குறுந்.22 : 3, 4
வலமாகச் சுரிந்து விளங்கும் வெண்கடம்பின் மலர்கள் வேனில் காலத்தில் மலர்ந்து மணம் வீசும்.
மேலும் காண்க : ஐங். 348, 383. அகம். 83
வலமாகச் சுழிந்து எழுதல், மலர்தல் – வலஞ் சுழிசிறப்பிக்கப்படுதலின் உட்கருத்து யாது ? அறிவியல் நோக்கு.- ஆய்க.

கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
 சுடர்நிமிர் மின்னொடு வலனேர் பிரங்கி
                              மதுரையாசிரியர் நல்லந்துவனார் அகநா. 43: 1-2
வலமாகஎழ- மழை பொழிதல்84
மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயல் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை
                                     மதுரை எழுத்தாளன்,அகநா.84 : 1- 5
மலைமீது வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து -  உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க மழை – திசையெல்லாம் மறையப் பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே.
வலன் ஏர்பு - மேகநீர்முகந்து –மழை,குதிரைமரம்
 குணகடல் முகந்த கொள்ளை வானம்
பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத் தனைய ஆகி வலன் ஏர்பு
-                       கபிலர் , அகநா. 278: 1 – 3
கீழ்த்திசைக் கடலிடத்து நீரைமுகந்துசுமந்துயானகள் அணிவகுத்து நின்றது போல் தோன்றி வலமாக எழுந்து சென்றன.
குதிரைமரம்ஆற்றில் நீரைத் தேக்குதற்குக் கால்களாய் நிறுத்தப்படும் மரம்.
வலம் திரி மருப்பு (298) பனிக்கட்டி + நுங்குச்சுளை
................................ மடப்பிணை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச்
                                             இடைகாடனார், அகநா. 304 : 8 – 10
இளைய பெண்மான், வலமாகத் திரிந்த கொம்பினையுடைய தலைமையுடைய கலைமானொடு, அசையும் கிளையினையுடைய குருந்த மரத்தின் பொருந்திய நிழலில் தங்கியிருக்க.

ஞாயிறு –பெருமை –வலமாக எழுதல் – ஏன் ?
பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி
மல்குகடல் தோன்றியாங்கு .....................
               மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், அகநா. 298: 1 – 3
உலகில் வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும் பலகதிர்களையுடைய ஞாயிறானது, அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பல்வகை தொழில்களைத் தருமாறு , வலமாக எழுந்து, நீர்முக்க கடலிலே தோன்றினாற்போல.  ‘ வழையமல் அடுக்கத்து வலனேர்பு....                                                                                                                     ’                                                                           ........அகநா. 328 : 1
பூமியின் வடமண்டலத்தில் சுழற்சி இடமாக இருக்க - தென் மண்டலத்தில் சுழற்சி வலமாக மேலெழும் என்பது அறிவியல் உண்மை - மேலும் ஆய்க




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக