வியாழன், 28 மே, 2015

முதுமொழிக் காஞ்சி --- பொன்மொழிகள்

    முதுமொழிக் காஞ்சி --- பொன்மொழிகள்
                                               மதுரைக் கூடலூர்க் கிழார்

ஆர்கலி  உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தது ஒழுக்கம் உடைமை
                                                                                       1: 1
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம் கற்றலைவிடச் சிறந்தது ஒழுக்கமுடன் திகழ்வது.

வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை
                                                                                        . 1: 4
வளமையாய் இருத்தலைவிட உண்மையாய் இருத்தல் மேலானது.

சீருடை ஆண்மை செய்கையின் அறிப
                                                                    2 : 10
 முயற்சியின் வலிமை முடிக்கும் செயலால் அறியப்படும்.

அறத்தாற்றின் ஈயாதது ஈகையன்று
                                                                               . 5 : 8
அறவழியில் கொடாதது கொடை ஆகாது.

இரத்தலின் ஊங்கு இளிவரவு  இல்லை
                                                                          . 6 : 9
இரத்தலைவிட இகழ்ச்சியானது வேறில்லை.

பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்
                                                                                   7 : 10
பொருள் ஆசை கொண்டவன் அறநெறியில் வாழ்தல் இல்லை.
துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது
                                                                                        8 : 5
முயற்சியால் வரும் துன்பங்களைத் தாங்குவார்க்கு இன்பம் எளிதாகக் கிடைக்கும்.

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
                                                                                            10 : 1
இவ்வுலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும்  உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும் சிறந்த இயல்புகளையே பேசப் பழகுதல் வேண்டும்.
                                              முற்றும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக