வெள்ளி, 15 மே, 2015

ஆமை முட்டை இடல்

ஆமை முட்டை இடல்
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி
நிறைசூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகுவாய்க்
 கணவன் ஓம்பும் கானலம்.........
                                              குமுழிஞாழலார் நப்பசலையார், 160 ; 4-8
நிறைந்த சூல் கொண்ட யாமை,அடும்புக் கொடியினை அழியுமாறு இழுத்து வளைந்த உப்பங்கழியிடத்து வெண்மையான மணல் மேட்டின் பக்கத்தே அதனைச் சேர்த்து; யானைக் கொம்பினாற் செய்த வட்டுப் போன்ற வடிவுடைய புலால் மணக்கும் முட்டையை ஈன்று, பிறவுயிர்கள் அறியாவண்ணம் அம்மணலுள் மறைத்து வைத்தது; பிளந்த வாயினையுடைய ஆண் யாமை, அம்முட்டையினின்றும் குஞ்சு உயிர்த்தெழுந்து வெளிப்பட்டு வரும் அளவு, அதனைக் காத்துக் கிடத்தற்கு இடமான கடற்கரைச் சோலை.

கணவன் -  ஆண் யாமை –அஃறிணை ஆண்பாற் பொருளிலும் வழங்கும் –காண்க, நற்.103, குறுந்.151.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக