திங்கள், 14 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 59 - 61

நற்றிணை – அரிய செய்தி – 59 - 61
திருமாவுண்ணி – கண்ணகி
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி
மதுரை மருதனிளநாகனார். நற். 216 : 8-9
 ஏதிலாளன் செய்த செயலால் தோன்றிய கவலை வருத்திட ; மார்பகம் ஒன்றனை அறுத்த திருமாவுண்ணி நின்றிருந்தாள். ( திருமாவுண்ணி என்று குறிக்கப் பெறும் பெண் கண்ணகி என்பர்.)
நற்றிணை – அரிய செய்தி – 60
பெற்ற கடன் தீர
……………………. தோழி மின்னு வசிபு
 அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
 கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
முடத்திருமாறனார். நற். 228 : 1  3
  மின்னல் இருளைப் பிளக்கும் ஒளியுடையதும் முழக்கத்தைச் செய்யும் குரலையுடையதுமான மேகம் நீர் நிறைந்த சூல் முதிர்ந்து விளங்கும்; அது பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையைப் பொழியும்’; அம்மழை கண்ணொளி மறையுமாறு செறிந்த இருளுயுடைய நடுயாமத்தில் பரவலாகப் பொழியும்.
நற்றிணை – அரிய செய்தி – 61
யானைப் புணர்ச்சி
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயம் குழையத் தீண்டி
முதுவெங் கண்ணனார்.நற்.232: 1- 2
சிரிய கண்ணையும் பெரிய கையையும் உடைய  யானையின் ஆண் – பெண்ணாகிய இரு இனமும் மலைப் பச்சைச் சூழ்ந்த குளிர்ந்த குளத்தில் மெய் தளருமாறு புணர்ந்து மகிழும். ( விலங்கியல் வல்லுநர் வழி ஆய்க .)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக