சனி, 21 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 10

பட்டினப்பாலை – அரிய செய்தி – 10
வணிகர் நேர்மை
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நன்னெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி துவன்று இருக்கை
                    கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 206 – 212
                             வணிகர்கள், வளைந்த கலப்பையைக் கொண்டு, உழவுத் தொழிலை விரும்பிச் செய்யும் உழவர்களின் நீண்ட நுகத்தடியின் நடுவில் தைக்கப்பட்டுள்ள பகலாணி போல, நடுவு நிலை என்ற குணம் நிலைபெற்று விளங்கும் நல்ல உள்ளம் உடையவர்கள் ; பொய் உரைப்பின் தம் குடிக்குப் பழிச் சொல் வந்து சேரும் என அஞ்சி உண்மையே கூறுவர்.
வணிகர்கள், தம்முடைய பல பண்டங்களையும் பிறருடைய பல பண்டங்களையும் வேறுபடுத்தி நோக்காமல் ஒப்ப ஆராய்ந்து காண்பர்.
                      தாம் கொள்ளும் பொருள்களை மிகுதியாகக் கொள்வதில்லை ; தாம் கொடுக்கும்  பொருள்களையும்  குறைவாகக் கொடுப்பதில்லை.
                          தங்களுக்கு வரக்கூடிய இலாபத்தை வெளிப்படையாகக் கூறி வணிகம் செய்வர். இந்நெறியில் அவர்கள் நின்றமையால் அவர்கள் வணிகத்தில் சிறந்த செல்வத்தால் மிகுந்து விளங்கினர்.
( பகல் – பகலாணி ; கொண்டி – கொள்ளப்படும் பொருள் / கொள்ளை ; இருக்கை – குடியிருப்பு.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக