செவ்வாய், 10 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி

பட்டினப்பாலை – அரிய செய்தி
பட்டினப்பாலை – இந்நூலைஇயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இந்நூல் 301 அடிகளைக் கொண்டது. பெரும்பாலும் வஞ்சியடிகளால் அமைந்துள்ளது. இந்நூலைப் பாடியமைக்காகக் கரிகால் பெருவளத்தான் இப்புலவருக்குப் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என்று –
 ‘தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
 பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும் ‘ – என்று கலிங்கத்துப் பரணியும்
“பாடியதோர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு
கோடி பொன் கொண்டது நின் கொற்றமே ’ – என்று தமிழ்விடு தூதும் கூறும்.
பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத் திணையாதலின், இந்நூல் பட்டினப்பாலை எனப்பட்டது. பட்டினம் – காவிரிப் பூம்பட்டினம், பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
இந்நூல் தலைவன், பொருள் தேடச் செல்லும் செலவு தவிர்த்து நெஞ்சிற்குக் கூறுவதாய் அமைந்துள்ளது. தலைவியை ஆற்றுவித்துப் பிரிவதற்காகத் தலைவன் செலவழுங்கியமை  பாடற்பொருளாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக