ஞாயிறு, 15 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 4 அ

பட்டினப்பாலை – அரிய செய்தி – 4 அ                        
  கரிய பனைமரத்தில் உறையும் பறவைகள், செருக்குடைய பரதவச் சிறுவர்கள், கவணில் வைத்து, வீசி எறியும் கற்களுக்கு அஞ்சி, பறந்தோடும்.
                    புகார் நகரத்தின் புறத்தேயுள்ள சேரிகள், இத்தகைய பனை மரங்களையும், குட்டிகளையுடைய பன்றிகளையும் பலசாதிக் கோழிகளையும், உறை வைத்து அமைக்கப்பட்ட கிணறுகளையும் உடையன.
( ஆட்டுக் கிடா, சேவல், கெளதாரி போன்றவற்றைத் தம்முள் மோதவிட்டு விளையாடுவது கடற்கரை மணற்பரப்பில் நடைபெறும், அப்பந்தயத்தில் இரு குழுக்களிடையே முரண்பாடு தோன்ற  இரு தரப்பினரும்  கட்டிப் புரண்டு சண்டை இடுவர் ---  முரண் களரி – சண்டை யிடும் களம் ; போந்தை – பனை ; ஒக்கல்  - சுற்றம் ; அடும்பு – அடப்பம் பூ ;  மேழகத் தகர் – ஆட்டுக் கிடா.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக