திங்கள், 30 மே, 2016

மலைபடுகடாம் – ( கூத்தராற்றுப்படை)

மலைபடுகடாம் – ( கூத்தராற்றுப்படை)
பத்துப்பாட்டு வைப்புமுறையில் இறுதியாக இடம்பெற்றுள்ளது மலைபடுகடாம். நன்னன்சேய் நன்னனை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பாடிய இப்பாடல் 583 அடிகளைக் கொண்டது. யானை போன்ற மலையிடத்து யானை முழக்கம்போல் பல்வகை ஒலிகள் எழுவதைக் குறிக்கும், ‘ மலைபடுகடாம் மாதிரத்து இயம்ப’ என்ற அடியில் வரும் ‘ மலைபடுகடாம்’ என்பது நூலுக்குப் பெயராயிற்று.
     மலைக்கு யானையை உவமித்து, அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டிற்கு ‘ மலைபடுகடாம்’ எனப் பெயர் அமைந்தது.
     “ இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
பல் குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது.” 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக