ஞாயிறு, 29 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 18

பட்டினப்பாலை – அரிய செய்தி – 18
பிரிவறியாக் காதல்
திருமா வளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே
               கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 299 – 301
திருமாவளவன், பகைவரைக் கொல்வதை நோக்கமாகக் கொண்டு உயர்த்திய வேலைக் காட்டிலும், தலைவன் கடந்து செல்ல வேண்டிய காடுகள் மிகவும்  வெம்மையானவை, அச்சத்தைத் தருபவை.
அவன் செங்கோலினும், தன் காதலியின் மெல்லிய தோள்கள் குளிர்ந்து இன்பம்  பயப்பவை.
  நெஞ்சே ! பிரியாது வாழ்வதையே தலைவியின் தோள்கள் விரும்புகின்றன. பிரிந்து செல்வதை அவற்றால் தாங்கிக் கொள்ள இயலாது. ஆதலால், பட்டினம் பெறுவதாயினும் என் காதலி ஈண்டு என்னைப் பிரிந்து தனித்திருப்ப, யான் நின்னுடன் வருதல் இயலாது, இனி, அங்குச்சென்று வாழ்வாயாக எனத் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறிச் செலவழுங்குவதாகப் பட்டினப்பாலை என்னும் இவ்வக நூல் அமைந்துள்ளது.
முற்றும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக