வியாழன், 26 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 15

பட்டினப்பாலை – அரிய செய்தி – 15
கொண்டி மகளிர்
கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ
                             கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.  246 – 248
திருமாவளவனால் சிரைப்படுத்திக் கொண்டுவரப்பட்ட பகை மன்னர்களின் உரிமை மனைவியர் பலரும், நீர் உண்ணும் துறைகளில் நீராடுவர், அம்பலங்களை மெழுக்கிட்டு த் தூய்மை செய்வர், அந்திப் பொழுதில் விளக்குகளை ஏற்றி, தெய்வம் உறையும் தறிகளுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்வர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக