செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 322

திருக்குறள் – சிறப்புரை : 322
பகுத்துண்டு வாழ்….
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. – 322
சான்றோர் அறமென்று தொகுத்துச் சொல்லிய எல்லாவற்றுள்ளும்  தலைசிறந்து விளங்குவது,  இருப்பவற்றை  அஃறிணை உயர்திணை எனப்பாராது பலஉயிர்களோடும் பகுத்துண்டு வாழ்வதாகிய அறமே. உயர்நிலை உயிராகிய மானுடம்,   உறவுகளாகிய பிற  உயிர்களையும் பேணிப் பாதுகாப்பது கடனாம் 

1 கருத்து:

  1. உயிர்களை பசியால் வாட்டுதலும் கொலையே என்பதால் இக்குறளை கொல்லாமை அதிகாரத்தில் வைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு