வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 332

திருக்குறள் – சிறப்புரை : 332
உருண்டோடிடும்…..
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. – 332
கூத்தாடும் அரங்கிற்கு வரும்  மக்கள்கூட்டம் தொடக்கத்தில் சிறிதாகப் பின்னர்ப் பெருகிப் பெருங்கூட்டமாகிக் கூத்து முடிந்த பின் ஒரு நொடிப்பொழுதில் கூட்டம் கலைந்து சென்று விடுதலைப்போலத் தீவினையால் வந்த செல்வமும் கொஞ்சம் கொஞ்சமாகப்பெருகி மறைந்தொழியும்.
  “ நின்றன நின்றன நில்லா என உணர்ந்து
      ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க  (நாலடியார்)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக