வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 325

திருக்குறள் – சிறப்புரை : 325
பேரறம்
நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. – 325
நில்லா வாழ்க்கையின் நிலை அஞ்சிப் பிறவித்துன்பம் நீங்கவேண்டித் துறவு மேற்கொண்டவர்களைக் காட்டிலும் -  கொலைத் தொழிலுக்கு அஞ்சி, கொல்லாமையாகிய பேரறத்தினைப் போற்றுபவர்களே யாவரினும் சிறந்தவர் ஆவார்.
உயிர்கள் மீது இரக்கம் காட்டு ; உயர்ந்தோர் உலகம் ஈட்டு. 

1 கருத்து: