செவ்வாய், 9 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :536

திருக்குறள் – சிறப்புரை :536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல். –
அன்புடைமை, அறிவுடைமை, அருளுடைமை போன்றவை  எக்காலத்தும் யாரிடத்தும் மறத்தல் இல்லாது பொருந்தியிருக்குமானால் அதற்கு ஒப்பானது வேறு ஒன்றும் இல்லை.
“ ………… ……… யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்.” – பரிபாடல்.
 இறைவா! நினது திருவடி நிழலை எய்த விரும்பிய நாங்கள் நின்னிடம் வேண்டுவன பொன்னும் பொருளும் போகமும் அல்ல ; எமக்கு வீடு பேறு நல்கும் அருளும் அன்பும் அறமும் என்ற மூன்றுமேயாம்.


1 கருத்து: