திங்கள், 29 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :553

திருக்குறள் – சிறப்புரை :553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.~~~~ ௫௫
 அரசன் தன் ஆட்சியின்கீழ் வாழும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குரிய நீதி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நாள்தோறும்  நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாவிடில் நாள்தோறும் நாடு சீரழிந்து கெடும்.
“ அலத்தல் காலை ஆயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே. “ புறநானூறு.

உலகமே வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப் பாதுகாக்கும் வல்லமை உடையவன் அதியமான்.. அவன் தாள் வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக