ஞாயிறு, 21 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :545

திருக்குறள் – சிறப்புரை :545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. ------
நீதி நெறிபிறழாது ஆட்சி செய்யும் மன்னவன் நாட்டில் பருவம் தவறாது மழை பொழியும்  விளைச்சலும் பெருகிப் பயன் நல்கும்.
“ வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
  நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது
 பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்னும்
அத்தகு நல்லுரை அறியாயோ நீ”. --- சிலப்பதிகாரம்.

பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டின்கண், வானம் பொய்க்காது மழை பொழியும் ; வளம் தப்பாமல் விளைச்சல் பெருகும் ; அரசர் கொற்றம் சிதையாது நாடு சிறக்கும் என்று ஆன்றோர் கூறிய நன்மொழிகளை அறியாயோ நீயும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக