சனி, 20 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :544

திருக்குறள் – சிறப்புரை :544
குடிதழீஇக் கோலோச்சும்  மாநில மன்னவன்
அடிதழீஇ நிற்கும் உலகு. ----- ௪௪
தன் குடையின் கீழ் வாழும் மக்களுக்காகவே ஆட்சி நடத்தும்  மாநில மன்னனின் அடியை,  மக்கள் தொழுது போற்றுவர்.
“ வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்ப
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்
மாஇரும் புடையல் மாக் கழல் புனைந்து.” --- பதிற்றுப்பத்து.

மன்னனே..! மிக உயர்ந்ததும் நல்ல புகழும் உலகம் உள்ள அளவும் அழியாமல் நிலைத்து நிற்க ; வறுமையால் வாட்டமுற்ற நின் குடிகளை மேம்படுத்திய வெற்றி வீரனே..! அரிய பெரிய பனந்தோட்டால் ஆகிய மாலையையும் பெரிய வீரக் கழலையும் அணிந்து பகைவர்களை அழித்தொழித்தவனே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக