வெள்ளி, 12 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :539

திருக்குறள் – சிறப்புரை :539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. ---
வெற்றிக்களிப்பில் பெருமிதம்கொண்டு கடமை தவறும்பொழுது, பெருமிதச் செருக்கால் அழிந்து போனவர்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
“ மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.” --- புறநானூறு.

வேந்தே..! மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது, அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால், எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக