சனி, 13 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :540

திருக்குறள் – சிறப்புரை :540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின். --- ௪0
 ஒருவன் தான் எண்ணியதை எண்ணியபடியே முடிக்க அதே சிந்தனையுடன் செயல்பட்டால் எண்ணிய எல்லாவற்றையும் எளிதில் முடிக்கலாம்.
“ எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை
என்று ஒருவர்

தங்கண் அழிவு தாம் செய்யற்க.” என்னிடத்தில் ஒருபொருளும் இல்லை ; எனக்கென்று உறவினர்களும் இல்லை ; என்று ஒருவர், மனம் தளர்ந்து தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்ளும் செயலைச் செய்யாதிருக்க வேண்டும்.

1 கருத்து: