ஞாயிறு, 28 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :552

திருக்குறள் – சிறப்புரை :552
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. ~~~ ௫௫
செங்கோலைக் கையில் கொண்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்றி நல்லாட்சி நடத்தாமல்  வரி வேண்டி மக்களை வருத்தும் மன்னன்  ~  வேல் ஏந்திக் கைப்பொருளைக் கொடு என்று வழிப்பறி செய்யும் கொள்ளைக்காரனோடு ஒப்பாவான்.
“ குடிபுரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்
 சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே. புறநானூறு.
குடிமக்களிடம் வரி வேண்டி இரக்கும் (பிச்சை கேட்பதுபோல்)  சிறுமை உள்ளம் படைத்த மேம்பாடில்லாத ஆண்மை உடையவனுமான ஒருவனுக்கு அரசு உரிமை கிடைத்தால் அது அவனுக்குத் தாங்க இயலாத சுமையாக விளங்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக