புதன், 8 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 700

திருக்குறள் – சிறப்புரை : 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். ௭00
யான் அரசனுக்கு நெடுநாள் நட்புடையன் எனக்கருதித் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்திப் பண்பற்ற செயல்களைச் செய்பவரின்  நட்புரிமை கேடு பலவும் தரும்.
“ நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
 புல்லா விடுதல் இனிது.” ----இனியவை நாற்பது.

தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக