திங்கள், 27 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 719

திருக்குறள் – சிறப்புரை : 719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார். --- ௭௧௯
சான்றோர் நிறைந்த அவையில் அறிவார்ந்த உரையாற்றும் சொல்வன்மை உடையவர்கள் மூடர்கள் நிறைந்த அவையில் மறந்தும் அவ்வாறு பேசாதிருத்தல் வேண்டும்..
“ புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்.” –பழமொழி.

அறிவு மிக்கவரின் அறிவினை ஆராய்ந்து அறிதல், அறிவு மிக்கவர்க்கே உளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக