வெள்ளி, 24 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 716

திருக்குறள் – சிறப்புரை : 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.--- ௭௧௬
நூலறி புலவர் நிறைந்த அவையில் கற்றறிந்தவன் சொற்குற்றம் உடையனாதல் . நன்னெறிக்கண் நின்றொழுகும் ஒருவன் அந்நெறியினின்று நிலைதளர்ந்து வீழ்ந்ததைப் போன்றதாம்..
“ புல்லா எழுத்தில் பொருள் இல் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே….”---- நாலடியார்.
சொற்பொருள் அறிவு இல்லாத, பயனற்ற சபையைச்சேர்ந்த, நல்ல நூல்களைக் கற்காத ஒருவன், பொருந்தாத சொற்களால் உரைப்பதையும் பெரியோர்  (அவன்பால் இரக்கம் கொண்டு) தம் மனம் வருத்தமடைந்தும் அவ்வுரையைக் கேட்பர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக