புதன், 22 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 714

திருக்குறள் – சிறப்புரை : 714
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். ---- ௭௧௪
 கற்றோர் கூடிய அவையில் உரையாற்றும்பொழுது அவர்கள் பாராட்டுமாறு பேச வேண்டும் ; கல்லார் நிறைந்த அவையில் உரையாற்றும்பொழுது தம் புலமைத் திறத்தைக் காட்ட முனையாது அவர்கள் புரிந்துகொள்ளுமாறு இயல்பாகப் பேச வேண்டும்.
“கைஞ் ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
 சொல் ஞானம் சோர விடல்.” --- நாலடியார்.
அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே, நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக