சனி, 11 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 703

திருக்குறள் – சிறப்புரை : 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
 யாது கொடுத்தும் கொளல். --- ௭0௩
ஒருவரின் முகக்குறிப்பினால் அவர்தம் மனக்கருத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையாரை என்ன விலைகொடுத்தாவது, அரசர் அவரைத் தமக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.
“நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே.” – புறநானூறு.
வேந்தே..! இரவலர்தம் மனக்கருத்தை முகக் குறிப்பினாலே அறிந்து அவர்தம் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உடையவன் என்பதால் நின்னைக் காண விருப்பத்துடன் பரிசிலர் வருவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக