வியாழன், 9 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 701

71. குறிப்பறிதல்
திருக்குறள் – சிறப்புரை : 701
 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி. – ௭0௧
ஒருவர் வாய் திறந்து எதுவும் கூறாதபோது அவர் முகம் நோக்கிக் குறிப்பால் அவர் மனதில் உள்ளதை  அறியும் ஆற்றலுடையவன் எக்காலத்தும் வற்றாத நீரை உடைய கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு அணியாவான்.
“ இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
 நல்லது வெஃகி வினை செய்வார்.”---பரிபாடல்.

இரப்போருடைய வறுமையை அவர்தம் மெய்ப்பாட்டாலேயே உணர்ந்து அவர் வாய் திறந்து கேட்பதற்குமுன் ஈதலைச் செய்வார் சான்றோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக