வெள்ளி, 17 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 709

திருக்குறள் – சிறப்புரை : 709
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். --- ௭0௯
கண், உள்ளத்தெழும் உணர்ச்சிகளைக் காட்டவல்லது. கண் உரைக்கும் செய்திகளை அறிய வல்லார்க்கு ஒருவனுடைய பார்வையைக்கொண்டே அவன் மனத்தில் உள்ள பகைமையையும் நட்பையும் அறிந்து கொள்ள முடியும்.
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. –குறள். 1100.
காதலர்தம் கண்ணொடு கண் நோக்கிக் காதல் குறிப்பினால் மனம் ஒன்றினாராயின் வாய்ச் சொற்கள் பயனின்றி ஒழியும்,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக