செவ்வாய், 21 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 713

திருக்குறள் – சிறப்புரை : 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.---- ௭௧௩
அவையின் சூழல்(இடம், பொருள்,காலம்,கேட்போர்) அறியாது உரைமுறை கடந்து உரையாற்றுபவர், சொல்லின் வகைதொகையும் அறியார்; கற்றுத் தேர்ந்த வல்லமையும் இல்லாதவர் ஆவர்.
“ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்
 ஓதி அனையார் உணர்வுடையார்…” –நாலடியார்.
பகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே ; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக