ஞாயிறு, 10 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 732

திருக்குறள் – சிறப்புரை : 732
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.--- ௭௩௨
பெருகும் பெரும்பொருளால் மாற்றாரும் விரும்பும் வளமுடையதாகிக் கேடின்றி மிகுந்த வளம் விளைவதே நாடாவது.
”மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇப்
பூத்தன்று பெரும நீ காத்த நாடே.” ----- பதிற்றுப்பத்து.

நின் நாட்டில் மழை வேண்டும் காலத்து மழை பொழிகிறது; நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லை; நின் நாடு பொலிவு பெற்று விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக