செவ்வாய், 12 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 734

திருக்குறள் – சிறப்புரை : 734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. ௭௩௪
கொடிய பசியும் நீங்காத நோயும் அழிவைத்தரும் பகையும்  நாடின்கண் சேராது மக்கள் மனநிறைவுடன் வாழுமாறு இனிதே இயங்குவதே நாடாவது.
”குழவி கொள்வாரின் குடி புறந்தந்து
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்…” ---பதிற்றுப்பத்து.
சேரலாதன். குழந்தையைப் பாதுகாக்கும் தாயைப்போலத் தன் குடிமக்களைப் பாதுகாத்து அறத்தையே ஆராயும் மனத்தை உடையவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக