திங்கள், 11 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 733

திருக்குறள் – சிறப்புரை : 733
பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு. --- ௭௩௩
பிறநாட்டு மக்கள் வாழ வழிதேடி இடம்பெயர்ந்து வருங்கால் கூடும் சுமையை ஒரு சேரத் தாங்கி அரசுக்குச் செலுத்தவேண்டிய இறைப்பொருள் முழுமையும் ஒருங்கே செலுத்தும் குடிமக்களைக் கொண்டதே நாடு.
” அரணம் காணாது மாதிரம் துழைஇய
 நனந்தலைப் பைஞ்ஞிலம் வருக இந்நிழல்…” –பதிற்றுப்பத்து.
உங்கள் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதற்குரிய இடத்தினைக் காணாது திசைகளிலெல்லாம் சென்று தேடிய இப்பரந்த நிலவுலகில் வாழும் மக்களே..! சேரலாதனின் குடை நிழலில் வந்து சேருவீராக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக