புதன், 27 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 747

திருக்குறள் – சிறப்புரை : 747
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்..--- ௭௪௭
பகைவர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டும் முற்றுகையிடாது எளிதான இடனறிந்து போர் தொடுத்தும் அரண் உள்ளிருப்போரைச் சூழ்ச்சியால் தம் வயப்படுத்த முயற்சி செய்தும் எவ்வகையானும் பகைவரால் கைப்பற்ற முடியாத காப்பு உடையதே அரண்.
“மாஇரும் புடையல் மாக்கழல் புனைந்து
மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇ”-----பதிற்றுப்பத்து.


 வேந்தே…!அரிய பெரிய பனந்தோட்டால் ஆகிய மாலையையும் பெரிய வீரக்கழலையும் அணிந்து பகை மன்னரது நிலை பெற்ற மதில்களை அழித்து அவற்றிலுள்ள வீரர்களைச் சிறைப்படுத்திக் கொண்டுவருபவன் நீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக