சனி, 30 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 750

திருக்குறள் – சிறப்புரை : 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.—௭௫0
ஓர் அரண், மேற்குறட்பாக்களில் சுட்டியுள்ள சிறப்புகளையெல்லாம் கொண்டிருப்பினும் செயல் திறன் என்ற ஒன்று  இல்லாதவரிடத்து அவ்வரண் சிறப்புப் பெறுவது இல்லை.
”செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடல்படை குளிப்ப மண்டி அடர்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவல் படப்பை ஆர் எயில் பலதந்து
அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி…”—புறநானூறு.

போர் செய்ய எதிர்ந்த பகைவருடைய நாடுகளில் கடல் போன்ற படை, மேலும் மேலும் உட்புகுந்து செல்க; அடர்ந்த புள்ளிகளையுடைய சிறிய கண்ணையுடைய யானையைத் தடையில்லாது செம்மையாக ஏவிப் பசிய விளை வயல்களையும் அரிய மதில் அரண்கள் பலவற்றையும் கொள்க; அவ்வரண்களில் கொண்ட அழகிய நல்ல அணிகலன்களைப் பரிசிலர்களுக்கு முறையுடன் வழங்குக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக