வெள்ளி, 22 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 742

திருக்குறள் – சிறப்புரை : 742
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
 காடும் உடையது நாடு. ௭௪௨
மணிபோலும் வெள்ளிய நீரும் வளமுடைய பரந்த நிலமும் பாதுகாப்பாக அமைந்த மலையும் குளிர்ந்த நிழல் பரப்பும் அழகிய காடும் ஆகிய இந்நான்கு வகைப்பட்ட இயற்கை அமைப்புடையதே அரணாகும்.
“கடிமிளை குண்டு கிடங்கின்
நெடுமதில் நிலை ஞாயில்
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன்.”---பதிற்றுப்பத்து.

மிகுந்த காவலையுடைய காவற்காட்டையும் ஆழமான அகழியையும் உயர்ந்த புறமதிலையும் நிலையான மதிலின் உச்சியையும் அம்புக்கட்டுக்களையுமுடைய அழித்தற்கரிய மதிலை உள்ளே புகுந்து அழித்துச் சமையல் செய்தலால் உண்டாகாமல் ஊரினை நீ சுடுவதனால் உண்டாகிய புகையை உடையதும் பகைவரைக் கொன்று பெருமிதத்தால் மலரப் பெற்றதுமாகிய மார்பினை உடையவன்…சேரலாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக