வியாழன், 21 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 741

75. அரண்
திருக்குறள் – சிறப்புரை : 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.—௭௪௧
பகைவர் மீது படையெடுத்துச் செல்வதற்கு அரண் சிறப்புடையது; பகைவர்க்கு அஞ்சித் தன்னை வந்தடைந்தார்க்கும் அரண் சிறந்த காப்புப் பொருளாகிறது.
“புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை.”---புறநானூறு.
புதிய பறவை வந்தாலும் பழைய பறவை அவ்விடம் விட்டு அகன்றாலும் அத்தகைய தீய குறிகளால் மன நடுக்கமுறாத சேரமானின் அரிய பாதுகாப்பினை உடையது அவன் நாடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக