வெள்ளி, 29 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 749

திருக்குறள் – சிறப்புரை : 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.--- ௭௪௯
போர்முகத்துப் பகைவர் அழிய அரணகத்து இருப்போர்தம் செயல் திறனால் வெற்றி பெறும் பெருமையுடன் விளங்குவது அரண்.
“இருபெரு வேந்தர் மாறுகொள் வயின்களத்து
ஒருபடை கொண்டு வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்….”---அகநானூறு.
பேரரசர் இருவர் தம்முள் பகைகொண்டு போரிடும் போர்க்களத்தில், ஒப்பற்ற தன்படையைக் கொண்டு தன்முன் வருகின்ற படைகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் போர்க்கள வெற்றியாகிய செல்வமே பெருமை உடையது; அப்பெருமையே நிலைபெற்ற செல்வமாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக