செவ்வாய், 19 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1168


திருக்குறள் -சிறப்புரை :1168

மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.----- ௧௧௬௮

இரவே நீ மிகவும் இரங்கத்தக்காய்..! இவ்வுலகத்தில் உள்ள நிலைபெற்ற உயிர்கள் அனைத்தையும் உறங்கச்செய்து, துயிலாது தனித்திருக்கும் உனக்கு என்னையன்றி வேறு துணை இல்லையே.

சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினும் என்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.”  ----குறுந்தொகை.

தோழி…! கார்ப்பருவத்தின் இறுதி நாட்களில், சேற்றில் நிற்றலை வெறுத்த, சிவந்த கண்களையுடைய எருமை, இருள் செறிந்த நள்ளிரவில்  ஐ என்ற ஒலியெழுப்பிச் சேற்றைவிட்டு வெளியே வரக் கரையும், அத்தகைய அச்சத்தைத்தரும் கூதிர்ப்பருவத்தும், என்னுடைய நெஞ்சு வருந்திப் புண்பட்ட துன்பம் காரணமாக, ஊர் காப்பாளர் இரவில் துயிலாது நாழிகையை எண்ணிக்கொண்டு இருப்பது போல என் கண்கள் உறங்காதிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக