ஞாயிறு, 31 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1179


திருக்குறள் -சிறப்புரை :1179

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.----- ௧௧௭௯

காதலர் வரவை எதிர் நோக்கிக் கண்கள் துயிலாது காத்துக்கிடக்கின்றன ; அவர் வந்தபின்போ, பிரிந்து சென்றுவிடுவாரோ என்று அஞ்சியும் துயிலாது இருக்கின்றன. ஆக இருவழியிலும் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துத் துன்பத்தில் உழல்கின்றன.

“…………………………….. இவள்
 பூப் போல் உண்கண் புதுநலம் சிதைய
வீங்குநீர் வாரக் கண்டும்
தகுமோ பெரும தவிர்க நும் செலவே,” -----நற்றிணை

பெருமானே..! இத்தலைவியின் நீல மலர்போன்ற மையுண்ட கண்களின் புதுமை மாறாத, அழகு கெடும்படியாக, அவள் கண்களிலிருந்து நீர் வடியக்கண்டாய் அவ்வாறு கண்டும் நீ சுர வழியில் செல்வது தகுமா,,? தவிர்க நின் பிரிவை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக