திங்கள், 25 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1174


திருக்குறள் -சிறப்புரை :1174

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து,----- ௧௧௭௪

என் கண்கள், காதலர் பிரிவினைத் தாங்கும் வலிமையினைத் தர இயலாது, உய்தல் இல்லாத நோயைத் தந்து, அழுது, அழுது மேலும் அழமுடியா வண்ணம் நீர் வற்றிவிடச் செய்து விட்டனவே.

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தார் மெய்ம் மணம் கமழும் தண்பொழில்
வேழ வெண்பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி உகுமே.” -----ஐங்குறுநூறு

மணல் திட்டின்கண் நிற்கும் மாமரத்தின் புதிய மலர்களைக் கொண்ட பெரிய கிளை, திருமணத்திற்கூடிய பெண்களின் உடல்கள் மணப்பதுபோல் நறுமணம் கமழும் குளிர்ந்த பொழிலில் நாணலின் வெண்ணிறம் உடைய பூக்களின் பஞ்சுபோன்ற முனை அம் மாமரத்தின் அரும்புகளை துடைக்கின்ற ஊரினை உடையவன் தலைவன், என் கண்கள் அவன் கொடுமை கண்டு கலங்கி, மாரிக்காலத்தில் மழையில் நனைந்த மலர் போல் கண்ணீர் உகுக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக