வெள்ளி, 22 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1171


திருக்குறள் -சிறப்புரை :1171

118. கண்விதுப்பழிதல்

கண் தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. ---- ௧௧௭௧

 தணியாத இக்காம நோயை எமக்கு அளித்தது இக்கண்கள் காதலரைக் காட்டியதாலன்றோ ; அப்படிச் செய்த கண்கள் இன்று அவரைக் காட்டு என்று சொல்லி அழுவது எது கருதியோ.?

யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம்
கெழுதகைமையின் அழுதன தோழி
……………………………………
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே.” ----குறுந்தொகை.

தோழி..! அவரால் காம இன்பம் துய்த்த யாம், அவர் பிரிவினால் உண்டாகிய காமநோயைப் பொறுத்துக்கொண்ட போதிலும் குன்றுகளை உடைய நாட்டின் அத்தலைவரைக் கண்ட எம் கண்கள், தமக்கு எம்பாலுள்ள மிக்க உரிமையினால் அழுதன…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக