ஞாயிறு, 24 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1173


திருக்குறள் -சிறப்புரை :1173

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.---- ௧௧௭௩

 அன்று,  என்கண்கள் என்னையறியாது தாமே முன்சென்று காதலரைக் கண்டு மகிழ, இன்று,  பிரிந்துசென்ற  அவரைக் காணாது கண்ணீரைச் சிந்துகின்றன, இது மிகவும் நகைப்பிற்குரியதே..!

நனி மிகப் பசந்து தோளும் சாஅய்
பனி மலி கண்ணும் பண்டு போலா
இன்னுயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை.” ----நற்றிணை.

பசலை மிகப்பெற்ற தோளும் வாட்டமுற்று நீர் வடிக்கும் கண்களும் பழைய அழகு கெட்டு வேறுபட்டன. இவ்வாறு வேறுபடுமாறு இனிய உயிர் போன்றவரு பிரிவதற்கரியவருமான காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம் சென்றவராய் விட்டுப்பிரிந்தனர் என்று கூறிச் சினத்தல் நீ உன் உள்ளத்தில் கொண்டு ஊடுதலைச் செய்யவில்லையே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக