செவ்வாய், 2 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1182


திருக்குறள் -சிறப்புரை :1182

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு. --- ௧௧௮

அவர்(காதலர்) தந்தார் என்னும் பெருமிதத்தால்  பசலையானது மேன்மேலும் ஊர்ந்து உடல் முழுதும் பரவுகின்றது.

வெண்குருகு நரலும் தண்கமழ் கானல்
பூமலி பொதும்பர் நாள்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதரும் துறைவனொடு
இலங்குஎயிறு தோன்ற நக்கதன் பயனே.” ---குறுந்தொகை.

அவனுடன் தலைவி, தன்னுடைய விளங்கிய பற்கள் வெளிப்படச் சிரித்து விளையாடினமையால் உண்டாகிய பயன், தோளின் பழைய இயற்கை அழகு அழிய, செயற்கை அழகும் தேய்ந்து, துன்பத்தை உடைய உள்ளத்தோடு, இரவினும் கண்கள் துயிலாமல், உடம்பு பசலையாகி வேறுபட்டு உயிர் நீங்குவதுதானோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக