செவ்வாய், 16 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1202


திருக்குறள் -சிறப்புரை :1202

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்.-----0

தலைவரைப் பிரிந்து வாழும் காலத்து, அவரைப்பற்றி நினைப்பதால் எவ்வகையான துன்பமும் இல்லையாகின்றது. அதனால், எவ்வகையானும் காமம் இனிமையுடையதே.

ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம்
உள்ளின் உள்நோய் மல்கும்
புல்லின் மாய்வது எவன்கொல் அன்னாய்.’ ----குறுந்தொகை.

அன்னையானவளே..!  மலைகள் உயர்ந்து விளங்கும் நாட்டின் தலைவனுடைய, பூசிய சந்தனம் புலர்வதற்கு இடனாகிய மார்பினைப் பிரிந்து, யான் நினைத்த அளவிலேயே உள்ளத்தின்கண் காமநோய் பெருகிற்று; அங்ஙனம் நினையாது, தழுவினால் நோய் பெருகுவதற்கு மாறாக நீங்குவதன் காரணம் யாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக