சனி, 27 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1224


திருக்குறள் -சிறப்புரை :1224

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். ----- ௨௨௪

அன்று இனிமை செய்த மாலைப்பொழுது, இன்று காதலர் உடன் இல்லாத காலத்தில், இம்மாலைப் பொழுது  கொடுவாளினை ஏந்திய  கொலைக்களத்துக் கொலையாளிகள் போல என்னைச் சூழ்ந்து உயிர் உண்ண வருகிறதே.

இகல்மிகு நேமியன் நிறம்போல இருளிவர
நிலவுக் காண்பதுபோல அணிமது ஏர் தர
………………………………………………
செந்தீச் செவ்வழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்
மாலை என்மனார் மயங்கியோரே.”--- கலித்தொகை.

 போரில் வால்ல சக்கரப்படையைக் கொண்ட திருமாலின் நிறம் போல, இருள் பரவி வந்தது ; இருளைத் தன் ஒளியாலேபுறங்கண்டாற் போல, அழகிய மதியும் தோன்றி அழகு செய்தது.
 அந்திப்பொழுது வந்ததை, மகளிர் செந்தீயால் விளக்குகளை ஏற்றினர் ;  ஒளி பொருந்திய அணிகலன்கள் அணிந்த மகளிர் மாலைப்பொழுது விளக்கம் கொள்ள  வந்ததை, உயிரை அவர்தம் உடம்பினின்று பிரிக்கும் கொடுமையான காலம் என்பதை அறியாராய், அறிவு மயங்கி மாலை என்று கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக